ஹதீஸ்கள்
#4237
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (கைபர் வெற்றிக்குப் பிறகு) நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “(போரில் கிடைத்த செல்வத்தில் எனக்கும் ஒரு பங்கு கொடுங்கள்” என்று) கேட்டேன். அப்போது சயீத் பின் அல்ஆஸ் உடைய மகன்களில் (அபான் என்றழைக்கப்பட்ட) ஒருவர், “இவருக்குப் பங்கு கொடுக்காதீர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்.உடனே நான், “இவர் இப்னு கவ்கல் (என்ற நுஃமான் பின் மாலிக்) அவர்களை (உஹுத் போரில்) கொன்றவர்” என்று கூறினேன். உடனே அவர் (என்னைப் பற்றி), “என்ன ஆச்சரியம்! (தனது “தவ்ஸ்' குலத்தார் வசிக்கின்ற) “ளஃன்' எனும் மலை உச்சியிலிருந்து வந்திருக்கும் இந்தக் குழிமுயல் (ஒரு முஸ்லிமைக் கொன்று விட்டதற்காக என்னைக் குறை சொல்கின்றதே!)” என்று கூறினார்.282 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال سمعت الزهري، وساله، اسماعيل بن امية قال اخبرني عنبسة بن سعيد، ان ابا هريرة رضى الله عنه اتى النبي صلى الله عليه وسلم فساله، قال له بعض بني سعيد بن العاص لا تعطه. فقال ابو هريرة هذا قاتل ابن قوقل. فقال واعجباه لوبر تدلى من قدوم الضان
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4237
- Book Index
- 275
Grades
- -
