ஹதீஸ்கள்
#4213
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள “சத்துஸ் ஸஹ்பா' எனுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் மணவிருந்துக்கு (வலீமா) முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் தோல்விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, அவ்வாறே அது கொண்டுவந்து விரிக்கப்பட்டது. பிறகு, அதில் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (“ஹைஸ்' எனும் எளிமையான உணவு தயாரானது. அதை அங்கிருந்த முஸ்óம்கள் உண்டனர்.) அப்போது முஸ்லிம்கள், “ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இறைநம்பிக்கை யாளர்களின் அன்னை (நபியவர்களின் துணைவி)யரில் ஒருவரா? அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா?” என்று பேசிக்கொண்டனர். “ஸஃபிய்யா அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஹிஜாப் - திரையிட்(டுக்கொள்ளும்படி கட்டளையிட்)டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (நபியவர்களின் துணைவியரில்) ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்” என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்ட போது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்தபிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள்.272 அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، اخبرنا محمد بن جعفر بن ابي كثير، قال اخبرني حميد، انه سمع انسا رضى الله عنه يقول اقام النبي صلى الله عليه وسلم بين خيبر والمدينة ثلاث ليال يبنى عليه بصفية، فدعوت المسلمين الى وليمته، وما كان فيها من خبز ولا لحم، وما كان فيها الا ان امر بلالا بالانطاع فبسطت، فالقى عليها التمر والاقط والسمن، فقال المسلمون احدى امهات المومنين، او ما ملكت يمينه قالوا ان حجبها فهى احدى امهات المومنين، وان لم يحجبها فهى مما ملكت يمينه. فلما ارتحل وطا لها خلفه، ومد الحجاب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4213
- Book Index
- 253
Grades
- -
