ஹதீஸ்கள்
#4193
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அபூகிலாபா (ரஹ்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) அபூரஜாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் என் உரிமையாளர் அபூகிலாபா அவர்களுடன் ஷாம் நாட்டில் இருந்தேன். (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஒருநாள் மக்களிடம், “இந்த “கசாமா' (சத்திய முறை) தொடர்பாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று ஆலோசனை கேட்டார்கள்.254 “அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உங்களுக்குமுன் (வாழ்ந்த) கலீஃபாக்களும் தீர்ப்பளித்த உண்மை (விதி)தான்” என்று மக்கள் பதிலளித்தனர். அபூகிலாபா (ரஹ்) அவர்கள், அப்போது உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் அரியணைக்குப் பின்னால் இருந்தார்கள். அப்போது அன்பசா பின் சயீத் (ரஹ்) அவர்கள், “உரைனா குலத்தார் பற்றிய அனஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ் எங்கே (போயிற்று)?” என்று கேட்டார்கள்.255 அப்போது அபூகிலாபா (ரஹ்) அவர்கள், “(உரைனா குலத்தார் பற்றி) எனக்கும் அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “உரைனா குலத்தாரில் சிலர்' என்று காணப்படுகிறது. மற்றோர் அறிவிப்பில், “உக்ல் குலத் தாரில் சிலர்' (என்று கூறிவிட்டு) முழு நிகழ்ச்சியையும் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :
حدثني محمد بن عبد الرحيم، حدثنا حفص بن عمر ابو عمر الحوضي، حدثنا حماد بن زيد، حدثنا ايوب، والحجاج الصواف، قال حدثني ابو رجاء، مولى ابي قلابة وكان معه بالشام ان عمر بن عبد العزيز، استشار الناس يوما قال ما تقولون في هذه القسامة فقالوا حق، قضى بها رسول الله صلى الله عليه وسلم وقضت بها الخلفاء، قبلك. قال وابو قلابة خلف سريره فقال عنبسة بن سعيد فاين حديث انس في العرنيين قال ابو قلابة اياى حدثه انس بن مالك. قال عبد العزيز بن صهيب عن انس من عرينة. وقال ابو قلابة عن انس من عكل. ذكر القصة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4193
- Book Index
- 233
Grades
- -
