ஹதீஸ்கள்
#4191
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் “இஹ்ராம்' கட்டியவர்களாக ஹுதைபியாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணைவைப்பாளர்கள் தடுத்துவிட்டிருந்தனர். எனக்கு (காது சோணைவரை) நிறைய தலைமுடி இருந்தது. (அதிலிருந்த) பேன்கள் என் முகத்தின் மீது (உதிர்ந்து) விழத் தொடங்கின. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன். (அப்போதுதான், “இஹ்ராம்' கட்டியவர் “இஹ்ராம்' கட்டியிருக்கும்போது செய்யக் கூடாத காரியங்களைச் செய்துவிட்டால் அதற்கான பரிகாரம் என்ன என்பது தொடர்பாக), “உங்களில் யாரேனும் நோயாளியாக இருந்தால், அல்லது அவரது தலையில் துன்பம் தரும் (பேன், பொடுகு, காயம் அல்லது நோய்) ஏதும் இருந்தால் (அதன் காரணத்தால் இஹ்ராம் கட்டிய நிலையிலேயே அவர் தமது தலையை மழித்துக்கொள்ள நேரிட்டால் அதற்குப்) பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது குர்பானி கொடுக்க வேண்டும்” எனும் இந்த (2:196ஆம்) வசனம் அருளப்பெற்றது.251 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4191
- Book Index
- 231
Grades
- -