ஹதீஸ்கள்
#4183
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், குழப்ப(ம் நிறைந்த கால)த்தில் உம்ராவிற்காக (மக்காவிற்குப்) புறப்பட்டுச் சென்றார்கள்.244 அப்போது அவர்கள், “நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட ஹுதைபியா சம்பவத்தின் போது) செய்ததைப் போன்று செய்வோம்” என்று கூறிவிட்டு, உம்ராவிற்காக (இஹ்ராம் கட்டி) “தல்பியா' சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா ஆண்டில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியதே இதற்குக் காரணமாகும்.245 அத்தியாயம் :
حدثنا قتيبة، عن مالك، عن نافع، ان عبد الله بن عمر رضى الله عنهما خرج معتمرا في الفتنة فقال ان صددت عن البيت، صنعنا كما صنعنا مع رسول الله صلى الله عليه وسلم. فاهل بعمرة من اجل ان رسول الله صلى الله عليه وسلم كان اهل بعمرة عام الحديبية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4183
- Book Index
- 223
Grades
- -
