ஹதீஸ்கள்
#4182
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: “நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தால்...' என்று தொடங்கும் இந்த (60:12ஆம்) வசனத்தின் காரணத்தால் (தம்மிடம்) ஹிஜ்ரத் செய்து வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரிசோதித்துவந்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் தம் தந்தையின் சகோதரரிடமிருந்து பின்வருமாறு அறிவிக் கின்றார்கள்: இணைவைப்பாளர்களின் மனைவியரில் எவர் ஹிஜ்ரத் செய்து வந்து (முஸ்லிம்களை மணமுடித்துக்கொண்டு) விட்டார்களோ அவர்களுக்காக அவர் களுடைய (இணை வைப்பாளர்களான) கணவன்மார்கள் (மணக்கொடையாகச்) செலவிட்டதை அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என அல்லாஹ் தன் தூதருக்குக் கட்டளையிட்டான். இதைக் கூறிவிட்டு, தொடர்ந்து அபூபஸீர் (ரலி) அவர்கள் தொடர்பான அறிவிப்பையும் முழுமையாகக் கூறினார்கள்.243 அத்தியாயம் :
قال ابن شهاب واخبرني عروة بن الزبير، ان عايشة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت ان رسول الله صلى الله عليه وسلم كان يمتحن من هاجر من المومنات بهذه الاية {يا ايها النبي اذا جاءك المومنات}. وعن عمه قال بلغنا حين امر الله رسوله صلى الله عليه وسلم ان يرد الى المشركين ما انفقوا على من هاجر من ازواجهم، وبلغنا ان ابا بصير. فذكره بطوله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4182
- Book Index
- 222
Grades
- -
