ஹதீஸ்கள்
#4168
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இயாஸ் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (சலமா பின் அல் அக்வஉ -ரலி) அவர்கள் அந்த மரத்தின(டியில் “பைஅத்துர் ரிள்வான்' செய்தவ)ர்களில் ஒருவராவார். அவர்கள் என்னிடம், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (வெள்ளிக்கிழமை) “ஜுமுஆ' தொழுதுவிட்டு (வீட்டிற்கு)த்திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவில்கூட, சுவர்களுக்கு நிழல் படிந்திருக்காது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن يعلى المحاربي، قال حدثني ابي، حدثنا اياس بن سلمة بن الاكوع، قال حدثني ابي وكان، من اصحاب الشجرة قال كنا نصلي مع النبي صلى الله عليه وسلم الجمعة ثم ننصرف، وليس للحيطان ظل نستظل فيه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4168
- Book Index
- 210
Grades
- -
