ஹதீஸ்கள்
#4163
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
தாரிக் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஹஜ்ஜுக்குச் சென்றுகொண்டி ருந்தபோது, தொழுதுகொண்டிருந்த ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். “இது என்ன தொழுமிடம்?” என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், “இதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பைஅத்துர் ரிள்வான்' எனும் உறுதிப் பிரமாணம் வாங்கிய மரம் இருந்த இடம்” என்று கூறினர். பின்பு நான் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடம் வந்து இது பற்றித் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “அந்த மரத் தின் கீழ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்களில் ஒருவரான என் தந்தை (முசய்யப் - ரலி) அவர்கள், “(உறுதிப் பிரமாணம் நடந்து முடிந்த) மறு ஆண்டு நாங்கள் அங்கு சென்றபோது அந்த மரத்தை நாங்கள் மறந்துவிட்டோம். எங்களால் அதை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை” என்று கூறினார்கள் எனத் தெரிவித்துவிட்டு, பிறகு சயீத் (ரஹ்) அவர்கள், “முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே அதை அறியவில்லை. நீங்கள் அறிந்துவிட்டீர்களா? அப்படியானால், நீங்களே அதிகம் தெரிந்தவர்கள்” என்று (பரிகாசமாகக்) கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمود، حدثنا عبيد الله، عن اسراييل، عن طارق بن عبد الرحمن، قال انطلقت حاجا فمررت بقوم يصلون قلت ما هذا المسجد قالوا هذه الشجرة، حيث بايع رسول الله صلى الله عليه وسلم بيعة الرضوان. فاتيت سعيد بن المسيب فاخبرته فقال سعيد حدثني ابي انه كان فيمن بايع رسول الله صلى الله عليه وسلم تحت الشجرة، قال فلما خرجنا من العام المقبل نسيناها، فلم نقدر عليها. فقال سعيد ان اصحاب محمد صلى الله عليه وسلم لم يعلموها وعلمتموها انتم، فانتم اعلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4163
- Book Index
- 205
Grades
- -
