ஹதீஸ்கள்
#4156
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அந்த மரத்தின் கீழ் உறுதிப் பிரமாணம் (பைஅத்துர் ரிள்வான்) செய்தவர்களில் ஒருவரான மிர்தாஸ் பின் மாலிக் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும், அவர்களுக்கடுத்தவர்கள் அடுத்ததாகவும் (உயிர்) கைப்பற்றப்படுவர். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்தபின் இப்புவியில்) மட்டமான பேரீச்சம் பழத்தை யும் தொலி நீக்கப்படாத கோதுமையையும் போன்ற தரம் தாழ்ந்த மக்களே எஞ்சி யிருப்பர். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான்.230 அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا عيسى، عن اسماعيل، عن قيس، انه سمع مرداسا الاسلمي، يقول وكان من اصحاب الشجرة يقبض الصالحون الاول فالاول، وتبقى حفالة كحفالة التمر والشعير، لا يعبا الله بهم شييا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4156
- Book Index
- 200
Grades
- -
