ஹதீஸ்கள்
#4152
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஹுதைபியா உடன்படிக்கையின் போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோலால் ஆன ( நீர்க்) குவளை ஒன்று இருந்தது. அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அதன் பிறகு மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு என்ன (நேர்ந்தது)?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் குவளையிலிருக்கும் தண்ணீரைத் தவிர நாங்கள் உளூ செய்வதற்கோ குடிப்பதற்கோ எங்களிடம் வேறு தண்ணீரில்லை” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தை அந்தக் குவளைக்குள் வைத்தார்கள். அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து ஊற்றுக் கண் போல தண்ணீர் பொங்கி வரத் தொடங்கியது. அப்போது நாங்கள் அந்தத் தண்ணீரை அருந்தவும் செய்தோம். மேலும், அங்கத் தூய்மையும் செய்தோம். (அறிவிப்பாளர் சாலிம் பின் அபில்ஜஅத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) “நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், “அன்று நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?” என்று கேட்டேன். “நாங்கள் ஒரு லட்சம் பேராக இருந்திருந்தாலும் அந்தத் தண்ணீர் எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர்தான் இருந்தோம்” என்று பதிலளித்தார்கள்.227 அத்தியாயம் :
حدثنا يوسف بن عيسى، حدثنا ابن فضيل، حدثنا حصين، عن سالم، عن جابر رضى الله عنه قال عطش الناس يوم الحديبية ورسول الله صلى الله عليه وسلم بين يديه ركوة، فتوضا منها، ثم اقبل الناس نحوه فقال رسول الله صلى الله عليه وسلم " ما لكم ". قالوا يا رسول الله ليس عندنا ماء نتوضا به، ولا نشرب الا ما في ركوتك. قال فوضع النبي صلى الله عليه وسلم يده في الركوة، فجعل الماء يفور من بين اصابعه كامثال العيون، قال فشربنا وتوضانا. فقلت لجابر كم كنتم يوميذ قال لو كنا ماية الف لكفانا، كنا خمس عشرة ماية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4152
- Book Index
- 196
Grades
- -
