ஹதீஸ்கள்
#4147
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா ஆண்டில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். ஓரிரவு எங்களுக்கு மழை பெய்தது. (அன்று காலை) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு சுப்ஹ் தொழுவித்தார்கள். பிறகு எங்களை நோக்கி நேராகத் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று நாங்கள் கூறினோம். அப்போது, “என்னை நம்பக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரண்டு பிரிவினராக) உள்ளனர். “அல்லாஹ்வின் கருணையாலும், அல்லாஹ் அளித்த வாழ்வாதாரத்தாலும், அவனது அருட்கொடையாலும் நமக்கு மழை பொழிந்தது' என்று கூறுபவர்கள் என்னை நம்பி நட்சத்திரத்திரத்தை மறுத்தவர்களாவர். “இந்த நட்சத்திரத்தால் தான் எங்களுக்கு மழை பொழிந்தது' எனக் கூறுபவர்கள் என்னை மறுத்து நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்' என்று அல்லாஹ் சொன்னான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.222 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4147
- Book Index
- 191
Grades
- -