ஹதீஸ்கள்
#4146
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுக்கு அருகில் (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அமர்ந்து கவி பாடிக்கொண்டும் தம் பாடல்களால் (ஆயிஷாவைப்) பாராட்டிக்கொண்டும் இருந்தார்கள். (தம் பாடல்களில்) ஹஸ்ஸான், ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி, “நீங்கள் பத்தினி; அறிவாளி; சந்தேகத் திற்கப்பாற்பட்டவர்; (அவதூறு மூலம்) பேதைப் பெண்களின் மாமிசங்களைப் புசித்துவிடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்” என்று பாடினார்கள்.220 அப்போது ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், “ஆனாலும், நீங்கள் அப்படியல்ல (என்னைப் பற்றி அவதூறு பேசுபவர் களுடன் சேர்ந்துகொண்டு நீங்களும் புறம் பேசினீர்கள்”) என்று கூறினார்கள். (தொடர்ந்து) அறிவிப்பாளர் மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ஹஸ்ஸான் அவர்களைத் தங்களிடம் வர ஏன் அனுமதிக்கிறீர்கள்? அல்லாஹ் (தனது வேதத்தில்), “அவர்களில் (அவதூறு பரப்புவதில்) பெரும் பங்கு வகித்தவருக்குக் கடினமான வேதனையுண்டு' (24:11) என்று கூறுகிறானே” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “கண்பார்வை பறிபோவதைவிடக் கொடிய வேதனை ஏது?” என்று கூறிவிட்டு, “அவர் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சார்பில் பதிலளிப்பவராக' அல்லது “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சார்பில் (எதிரிகளுக்குப் பதிலடியாக) வசைக்கவி பாடுபவராக' இருந்தார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4146
- Book Index
- 190
Grades
- -