ஹதீஸ்கள்
#4145
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களை ஏசிக்கொண்டே (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “ஹஸ்ஸானை ஏசாதே. ஏனென்றால், அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சார்பில் (எதிரிகளின் வசைக் கவிதைகளுக்குப்) பதிலடி தருபவராய் இருந்தார்கள். (ஒருநாள்) ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இணைவைப்பாளர்(களான குறைஷி)களுக்கெதிராக வசைக்கவி பாட அனுமதி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பிறகு என்னுடைய வமிசாவளியை என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “(அவர்களைப் பற்றி நான் வசைக்கவி பாடும்போது) குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுவதைப் போன்று உங்களை உருவி எடுத்துவிடுவேன்” என்று கூறினார்.219 உர்வா (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், “நான் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை ஏசினேன். ஏனெனில், ஆயிஷா (ரலி) அவர்கள்மீது அவதூறு கூறுவதில் பெரும் பங்கு வகித்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார்” என்று அன்னார் கூறியதாகக் காணப்படுகிறது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا عبدة، عن هشام، عن ابيه، قال ذهبت اسب حسان عند عايشة فقالت لا تسبه، فانه كان ينافح عن رسول الله صلى الله عليه وسلم. وقالت عايشة استاذن النبي صلى الله عليه وسلم في هجاء المشركين قال " كيف بنسبي ". قال لاسلنك منهم كما تسل الشعرة من العجين. وقال محمد حدثنا عثمان بن فرقد، سمعت هشاما، عن ابيه، قال سببت حسان، وكان ممن كثر عليها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4145
- Book Index
- 189
Grades
- -
