ஹதீஸ்கள்
#4144
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், “இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்துச் சொல்லிக்கொண்டு...” எனும் (24:15) இறைவசனத்தை “இஃத் தலிக்கூனஹு...' என ஓதிவந்தார்கள். (இதன் மூலச் சொல்லான) “வல்க்' (எடுத்துச்சொல்லுதல்) என்பதற்கு “பொய்(யை எடுத்துச்)சொல்லுதல்' என்பது பொருள்” என (விளக்கம்) கூறிவந்தார்கள். மேலும், அறிவிப்பாளர் இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள், “இந்த வசனத்தைப் பற்றி ஆயிஷா அவர்களுக்கே நன்கு தெரியும். ஏனென்றால், இந்த வசனம் அவர்கள் குறித்துத்தான் இறங்கியது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثني يحيى، حدثنا وكيع، عن نافع بن عمر، عن ابن ابي مليكة، عن عايشة رضى الله عنها كانت تقرا {اذ تلقونه بالسنتكم} وتقول الولق الكذب. قال ابن ابي مليكة وكانت اعلم من غيرها بذلك لانه نزل فيها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4144
- Book Index
- 188
Grades
- -
