ஹதீஸ்கள்
#4139
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (“தாத்துர் ரிக்காஉ' எனும்) நஜ்த் போருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். (போரை முடித்துக்கொண்டு திரும்பிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே நிழல் பெற்று ஓய்வெடுத்தார்கள். தமது வாளை அந்த மரத்தில் தொங்கவிட்டார்கள். மக்கள் (ஆங்காங்கே இருந்த) மரங்களின் கீழே பிரிந்து சென்று நிழல் பெற்று (ஓய்வெடுத்துக்)கொண்டிருந்தனர். நாங்கள் இவ்வாறு இருந்துகொண்டி ருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் (அவர்களிடம்) வந்தோம். அப்போது ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்துகொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் தூங்கிக்கொண்டிருந்தபோது என்னிடம் இவர் வந்து எனது வாளை உருவியெடுத்துக்கொண்டார். உடனே நான் விழித்துக்கொண்டேன். எனது வாளை உருவிய நிலையில் எனது தலைமாட்டில் இவர் நின்றுகொண்டிருந்தார். “என்னிடமிருந்து உங்களைக் காப்பது யார்?” என்று கேட்டார். நான், “அல்லாஹ்' என்று பதிலளித்தேன். உடனே அவர் வாளை உறையிலிட்டார். பிறகு அவர் அமர்ந்துகொண்டார். அவர் இவர்தான்” என்று கூறினார்கள். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்டிக்காமல் (மன்னித்து) விட்டார்கள்.212 அத்தியாயம் :
حدثنا محمود، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن ابي سلمة، عن جابر بن عبد الله، قال غزونا مع رسول الله صلى الله عليه وسلم غزوة نجد، فلما ادركته القايلة وهو في واد كثير العضاه، فنزل تحت شجرة واستظل بها وعلق سيفه، فتفرق الناس في الشجر يستظلون، وبينا نحن كذلك اذ دعانا رسول الله صلى الله عليه وسلم فجينا، فاذا اعرابي قاعد بين يديه، فقال " ان هذا اتاني وانا نايم، فاخترط سيفي فاستيقظت، وهو قايم على راسي، مخترط صلتا، قال من يمنعك مني قلت الله. فشامه، ثم قعد، فهو هذا ". قال ولم يعاقبه رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4139
- Book Index
- 183
Grades
- -
