ஹதீஸ்கள்
#4138
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைப் பார்த்தேன். அவர்களிடம் (சென்று) அமர்ந்துகொண்டு “அஸ்ல்' (புணர்ச்சி இடைமுறிப்பு) பற்றிக் கேட்டேன்.210 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பனுல் முஸ்தலிக் (குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது, அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம். ஏனெனில், (எங்கள் மனைவியரைப் பிரிந்து) தனிமையில் இருந்தது எங்களை வாட்டியது. மேலும், (அந்தப் பெண்களுடன் உடலுறவு கொள்ளும்போது) “அஸ்ல்' செய்ய நினைத்தோம். (ஆனால்,) நம்மிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்க, அவர்களிடம் கேட்பதற்குமுன் நாம் “அஸ்ல்' செய்வதா?” என்று (எங்களுக்குள்) பேசிக்கொண்டு அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு, “நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள்வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.211 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4138
- Book Index
- 182
Grades
- -