ஹதீஸ்கள்
#4133
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு அணிகளில் ஓரணியினருக்கு (அச்சநேரத் தொழுகையைத்) தொழுவித் தார்கள். (அப்போது) மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு முன்னால் (நின்றுகொண்டு) இருந்தனர். பிறகு முதல் அணியினர் திரும்பிச் சென்று தம் தோழர்கள் (இரண் டாம் அணியினர்) நின்றுகொண்டிருந்த இடத்தில் (எதிரிகளுக்கு முன்னால்) நின்றுகொண்டனர். பிறகு இரண்டாம் அணியினர் (தொழுகைக்கு) வந்தனர். அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் சேர்ந்து ஒரு ரக்அத் தொழுதுவிட்டு, அவர்கள் (தொழுகையில்) இருக்க நபியவர்கள் சலாம் கொடுத்தார்கள். பிறகு இந்த அணியினர் எழுந்து (மீதியிருந்த) தமது ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர். முதல் அணியினரும் எழுந்து (மீதியிருந்த) தம்முடைய ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يزيد بن زريع، حدثنا معمر، عن الزهري، عن سالم بن عبد الله بن عمر، عن ابيه، ان رسول الله صلى الله عليه وسلم صلى باحدى الطايفتين، والطايفة الاخرى مواجهة العدو، ثم انصرفوا، فقاموا في مقام اصحابهم، فجاء اوليك فصلى بهم ركعة، ثم سلم عليهم، ثم قام هولاء فقضوا ركعتهم، وقام هولاء فقضوا ركعتهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4133
- Book Index
- 177
Grades
- -
