ஹதீஸ்கள்
#4129
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “தாத்துர் ரிக்காஉ' போரில் கலந்துகொண்ட (நபித்தோழர்களில்) ஒருவர் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அப்போரின்போது) அச்சநேரத் தொழுகையைத் தொழுதார்கள். (எங்களில்) ஓர் அணியினர் நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) அணிவகுத்தனர். இன்னோர் அணியினர் எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்தனர்.அப்போது நபி (ஸல்) அவர்கள், தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுவித்துவிட்டு அப்படியே நின்றுகொண்டார்கள். (நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையை நிறைவேற் றிய) அந்த அணியினர் தமக்கு (மீதியிருந்த இன்னொரு ரக்அத்தைத் தனியாகப்) பூர்த்தி செய்துகொண்டு திரும்பிச் சென்று, எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்து நின்று கொண்டார்கள். பிறகு (அதுவரை எதிரிகளுக்கு எதிரே நின்றுகொண்டிருந்த) இன்னோர் அணியினர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் மீதியிருந்த ஒரு ரக்அத்தை இவர்களுக்குத் தொழுவித்துவிட்டு (அப்படியே) அமர்ந்து கொண்டிருந்தார்கள். (இரண்டாவது அணியினர்) தமக்கு (மீதியிருந்த ஒரு ரக்அத்தைப்) பூர்த்தி செய்துகொண்டனர். பிறகு அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தார்கள். இதை ஸாலிஹ் பின் கவ்வாத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، عن مالك، عن يزيد بن رومان، عن صالح بن خوات، عمن شهد رسول الله صلى الله عليه وسلم يوم ذات الرقاع صلى صلاة الخوف ان طايفة صفت معه، وطايفة وجاه العدو، فصلى بالتي معه ركعة، ثم ثبت قايما، واتموا لانفسهم ثم انصرفوا، فصفوا وجاه العدو، وجاءت الطايفة الاخرى فصلى بهم الركعة التي بقيت من صلاته، ثم ثبت جالسا، واتموا لانفسهم، ثم سلم بهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4129
- Book Index
- 173
Grades
- -
