ஹதீஸ்கள்
#4121
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக்கொண்டு (யூதர்களான) “பனூ குறைழா' குலத்தார் (கைபரிலிருந்த தம் கோட்டையிலிருந்து)இறங்கிவந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சஅத் பின் முஆத் (ரó) அவர்களுக்கு ஆளனுப்பிட, அன்னார் கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபிகளார் தாற்காலிகமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந்ததும், நபி (ஸல்) அவர்கள், “உங்கள் தலைவரை' அல்லது “உங்களில் சிறந்தவரை' நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கிவிடு)ங்கள்” என்று அன்சாரிகளிடம் சொன்னார்கள். பிறகு, “(சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பிற்கு (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப்போகிறீர்கள்?)” என்று கேட்டார்கள். சஅத் (ரலி) அவர்கள், “இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்றுவிட வேண்டும்; இவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும் நீங்கள் கைது செய்ய வேண்டும் என்று நான் தீர்ப்பளிக்கிறேன்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்” அல்லது “அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்” என்று சொன்னார்கள்.195 அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن سعد، قال سمعت ابا امامة، قال سمعت ابا سعيد الخدري رضى الله عنه يقول نزل اهل قريظة على حكم سعد بن معاذ، فارسل النبي صلى الله عليه وسلم الى سعد، فاتى على حمار، فلما دنا من المسجد قال للانصار " قوموا الى سيدكم او خيركم ". فقال " هولاء نزلوا على حكمك ". فقال تقتل مقاتلتهم وتسبي ذراريهم. قال " قضيت بحكم الله ". وربما قال " بحكم الملك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4121
- Book Index
- 165
Grades
- -
