ஹதீஸ்கள்
#4120
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா மற்றும் பனுந் நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும்வரை, நபி (ஸல்) அவர்களுக்கு, (அன்சாரிகள்) சிலர் பேரீச்ச மரங்களை(ப் பயன்படுத்திக்கொள்ளும்படி அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தனர். (பனூ குறைழா, பனுந் நளீர் குலத்தாரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்ட பின்னர் அன்சாரிகளிடமே அந்த மரங்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.194 (அந்தச் சமயத்தில்) என் குடும்பத்தார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்களுக்குத் தாங்கள் கொடுத்திருந்த மரங்கள் அனைத்தையும், அல்லது அவற்றில் சிலவற்றை (திரும்பத் தரும்படி) கேட்குமாறு எனக்கு உத்தரவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் அந்த மரங்களை (பராமரிக்கும் பொறுப்பைத் தம் வளர்ப்புத் தாய்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் கொடுத்திருந்தார்கள். (நான் அந்த மரங்களை நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தபோது அங்கு) உம்மு அய்மன் (ரலி) அவர்கள் வந்தார்கள். எனது கழுத்தின் மீது துணியைப் போட்டு, “முடியாது! யாரைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு (அவற்றைத்) தரமாட்டார் கள். (ஏனெனில்,) அவற்றை அவர்கள் எனக்கு (உரிமையாக்கித்) தந்துவிட்டார்கள்” என்றோ அல்லது இது போல வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (உம்மு அய்மன் (ரலி) அவர்களைப் பார்த்து அவற்றைக் கொடுத்துவிடுங்கள். அதற்குப் பகரமாக) உங்களுக்கு இந்த அளவு தருகிறேன்” என்று கூறினார்கள். (அப்போது) உம்மு அய்மன் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), “அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த அளவு நபி (ஸல்) அவர்கள் எனக்குத் தரும்வரை (அவற்றை உங்க ளிடம் திருப்பித் தர) முடியாது” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் தர்கான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) அனஸ் (ரலி) அவர்கள், “அது போன்று பத்து மடங்கு (தருவதாக' நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவோ) அல்லது அதுபோன்ற வேறொரு வார்த்தையைக் கூறியதாகவோ நான் எண்ணுகிறேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابن ابي الاسود، حدثنا معتمر، وحدثني خليفة، حدثنا معتمر، قال سمعت ابي، عن انس رضى الله عنه قال كان الرجل يجعل للنبي صلى الله عليه وسلم النخلات حتى افتتح قريظة والنضير، وان اهلي امروني ان اتي النبي صلى الله عليه وسلم فاساله الذين كانوا اعطوه او بعضه. وكان النبي صلى الله عليه وسلم قد اعطاه ام ايمن، فجاءت ام ايمن فجعلت الثوب في عنقي تقول كلا والذي لا اله الا هو لا يعطيكهم وقد اعطانيها، او كما قالت، والنبي صلى الله عليه وسلم يقول " لك كذا ". وتقول كلا والله. حتى اعطاها، حسبت انه قال " عشرة امثاله ". او كما قال
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4120
- Book Index
- 164
Grades
- -
