ஹதீஸ்கள்
#4115
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அகழ்ப் போரின்போது ஒன்றுதிரண்டு தாக்கவந்த எதிர்)கூட்டுப் படையினருக்குக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது, “இறைவா! குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்குத் தீர்ப்பவனே! (சத்திய மார்க்கத்தை வேரறுக்க ஒன்றுதிரண்டு படையெடுத்து வந்துள்ள இந்தக்) கூட்டுப் படையினரைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.187 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا الفزاري، وعبدة، عن اسماعيل بن ابي خالد، قال سمعت عبد الله بن ابي اوفى رضى الله عنهما يقول دعا رسول الله صلى الله عليه وسلم على الاحزاب فقال " اللهم منزل الكتاب، سريع الحساب، اهزم الاحزاب، اللهم اهزمهم وزلزلهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4115
- Book Index
- 159
Grades
- -
