ஹதீஸ்கள்
#4113
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எதிரிகளின் செய்தியை (வேவு பார்த்து)க் கொண்டு வருபவர் யார்?” என்று கேட்டார்கள். ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள், “நான்' என்று (முன்வந்து) கூறினார்கள். மீண்டும், “எதிரிகளின் செய்தியை அறிந்து எம்மிடம் கொண்டு வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்கள், “நான்' என்று கூறினார்கள். பிறகு, “எதிரிகளின் செய்தியை எம்மிடம் கொண்டுவருபவர் யார்?” என்று (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்கள், “நான்' என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்யேகமான) உதவியாளர் ஒருவர் உண்டு; என்னுடைய (பிரத்யேக) உதவியாளர் ஸுபைர் ஆவார்” என்று கூறினார்கள்.186 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4113
- Book Index
- 157
Grades
- -