ஹதீஸ்கள்
#4101
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அய்மன் அல்ஹபஷீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நாங்கள் அகழ்ப் போரின்போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறையொன்று வெளிப்பட்டது. (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால் உடைக்க முடியவில்லை.) உடனே (இது பற்றித் தெரிவிக்க) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “இதோ ஒரு பாறை அகழில் காணப்படுகிறது” என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் இறங்கிப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு எழுந்தார்கள். அப்போது அவர்களது வயிற்றில் ஒரு கல் கட்டப் பட்டிருந்தது. (ஏனெனில்,) நாங்கள் மூன்று நாட்கள் எதையும் உண்ணாமóருந் தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் (உளி போன்ற) குந்தாலி எடுத்துப் பாறைமீது அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது. அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! வீடுவரை செல்ல என்னை அனுமதியுங்கள்” என்று கேட்டேன். (அவர்கள் எனக்கு அனுமதி வழங்கினார்கள். பிறகு, நான் வீட்டுக்குச் சென்று) என் மனைவி (சுஹைலா பின்த் மஸ்ஊத்) இடம், “நபி (ஸல்) அவர்கள் பசியோடிருப்பதை நான் பார்த்தேன். அதைப் பார்த்துக்கொண்டு என்னால் பொறுத்திருக்க முடியவில்லை. உன்னிடம் ஏதேனும் (உணவு) இருக்கிறதா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “என்னிடம் சிறிதளவு கோதுமையும் பெட்டையாட்டுக் குட்டி ஒன்றும் உள்ளது” என்று கூறினாள். உடனே நான் அந்த ஆட்டுக் குட்டியை அறுத்தேன். என் மனைவி கோதுமையை அரைத்தாள். பிறகு நாங்கள் இறைச்சியைச் சட்டியிலிட்டோம். குழைத்த மாவு இளகி (பக்குவ நிலைக்கு) வந்தது. மூன்று கற்களாலான அடுப்புக்குமேல் சட்டியிருந்தது. அது முழுமையாக வெந்துவிடும் நிலையிலிருந்தது. இந்த நிலையில் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். “என்னிடம் கொஞ்சம் உணவு இருக்கிறது. அல்லாஹ் வின் தூதரே! நீங்களும் (உங்களுடன்) இன்னும் “ஒருவர்' அல்லது “இருவர்' வாருங்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “(உம்மிடம்) எவ்வளவு உணவு இருக்கிறது?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு அதை (அதன் அளவை)க் கூறினேன். “இதுவே அதிகம்; சிறந்ததும் கூட” என்று கூறினார்கள். பிறகு நபி அவர்கள், “நான் வரும்வரையில் (அடுப்பி லிருந்து) சட்டியை இறக்க வேண்டாம்; சட்டியிலிருந்து ரொட்டியையும் இறக்க வேண்டாம் என்று நீர் உம் மனைவியிடம் சொல்வீராக” என்று கூறினார்கள். பிறகு (அங்கிருந்த தம் தோழர்களிடம்) நபி (ஸல்) அவர்கள்,”(எல்லாரும்)எழுங்கள்” என்று கூறினார்கள். உடனே முஹாஜிர்களும் அன்சாரிகளும் எழுந்தனர். நான் என் மனைவியிடம் சென்றபோது, “உனக்குக் கேடுதான்! நபி (ஸல்) அவர்கள் தம்மோடு இருக்கும் முஹாஜிர்களுடனும் அன்சாரிகளுடனும் வருகிறார்களே (என்ன செய்வதெனத் தெரியவில்லையே)!” என்று கூறினேன். உடனே என் மனைவி, “(உணவின் அளவு குறித்து) உங்களிடம் நபியவர்கள் கேட்டார்களா?” என்று வினவினார். அதற்கு நான், “ஆம்' என்று பதிலளித்தேன். (நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் வந்து சேர்ந்து,) “(வீட்டிற்குள்) முண்டியடிக்காமல் நுழையுங்கள்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் ரொட்டியைப் பிய்த்து அதன் மீது இறைச்சியை வைத்தார்கள். அதிலிருந்து எடுத்தவுடன் சட்டியையும் அடுப்பையும் மூடிவைத்தார்கள். தம் தோழர்களுக்கு அருகில் அதை வைத்தார்கள். பிறகு (சட்டியிலிருந்து இறைச்சியை) எடுத்து (தம் தோழர்களுக்கு)க் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ரொட்டியைப் பிய்த்தபடியும் (பாத்திரத்திலிருந்து இறைச்சியை) எடுத்து (ரொட்டியின் மீது வைத்து)க் கொடுத்தபடியும் இருந்தார்கள். அவர்கள் வ”ôர உண்டனர். இறுதியில் சிறிதளவு எஞ்சியது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (ஜாபிர் அவர்களின் மனைவியை நோக்கி), “இதை நீங்களும் உண்ணுங்கள்; அன்பளிப்பும் செய்யுங்கள். ஏனெனில், மக்கள் பசியுடன் உள்ளனர்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4101
- Book Index
- 145
Grades
- -