ஹதீஸ்கள்
#4100
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: முஹாஜிர்களும் அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்ட ஆரம்பித்தனர். அப்போது தம் முதுகு களின் மீது மண் எடுத்துச்சென்ற வண்ணம், நாங்கள்முஹம்மத் (ஸல்) அவர்களிடம்உறுதிமொழி கொடுத்தோம்!உயிரோடு இருக்கும்வரைஇஸ்லாத்தில் நிலைப்போம்! என்று (பாடியபடி) கூறிக்கொண்டி ருந்தனர். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் நபி (ஸல்) அவர்கள், இறைவா!மறுமையின் நன்மை தவிரவேறு நன்மை கிடையாது! அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்வழங்குவாய் வளம்! என்று (பாடலிலேயே) கூறினார்கள்.175 அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அகழ் தோண்டிக்கொண்டிருக்கும்) அவர்களுக்கு எனது ஒரு கையளவு தொலி நீக்கப்படாத கோதுமை கொண்டு வரப்பட்டு, கெட்டுப்போன கொழுப்புடன் சேர்த்துச் சமைக்கப்பட்டு அந்த மக்களுக்கு முன் வைக்கப்படும். அப்போது அவர்கள் எல்லாரும் பசியுடன் இருப்பார்கள். அந்தக் கெட்டுப்போன கொழுப்பு நாற்றமடித்தபடி தொண்டையிலேயே சிக்கிக்கொள்ளும். அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، عن عبد العزيز، عن انس رضى الله عنه قال جعل المهاجرون والانصار يحفرون الخندق حول المدينة، وينقلون التراب على متونهم وهم يقولون نحن الذين بايعوا محمدا على الاسلام ما بقينا ابدا قال يقول النبي صلى الله عليه وسلم وهو يجيبهم " اللهم انه لا خير الا خير الاخره، فبارك في الانصار والمهاجره ". قال يوتون بملء كفى من الشعير فيصنع لهم باهالة سنخة توضع بين يدى القوم، والقوم جياع، وهى بشعة في الحلق ولها ريح منتن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4100
- Book Index
- 144
Grades
- -
