ஹதீஸ்கள்
#4099
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ் (வெட்டும் பணியைப் பார்வை யிடுவதற்காக அந்த இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது குளிரான காலை நேரத்தில் முஹாஜிர்களும் அன்சாரிகளும் (அகழ்) தோண்டிக்கொண்டிருந்தனர். அவர்களுக்காக அந்தப் பணியைச் செய்வதற்கு அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் எவரும் இருக்கவில்லை. அவர்கள் படும் பாட்டையும், பசியை யும் கண்டபோது, இறைவா!மறுமை வாழ்வேவாழ்வாகும். (அதற்காக உழைக்கும்அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்வழங்குவாய் மன்னிப்பு! என்று நபி (ஸல்) அவர்கள் (கவிதையாகக்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் அவர்கள், நாங்கள்முஹம்மத் (ஸல்) அவர்களிடம்உறுதிமொழி கொடுத்தோம்!உயிரோடு இருக்கும்வரைஎப்போதும்அறப்போர் புரிவோம்! என்று கூறினர்.174 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4099
- Book Index
- 143
Grades
- -