ஹதீஸ்கள்
#4096
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையில் குனூத் (எனும் சிறப்பு துஆ நபிகளார் காலத்தில் இருந்ததா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். அப்போது நான், “ருகூவிற்கு முன்பா? அல்லது பின்பா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ருகூஉவிற்கு முன்புதான்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், “தாங்கள் ருகூஉவிற்குப் பின்னால்தான் என்று சொன்னதாக இன்னார் எனக்குத் தெரிவித்தாரே” என்று கேட்டேன். அதற்கு, “அவர் தவறாகக் கூறியிருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு(ம்கூட) ஒரு மாத காலம்தான் குனூத் ஓதினார்கள். (அது எப்போது நடந்ததென்றால்,) நபி (ஸல்) அவர்கள் “குர்ரா' (குர்ஆனை நன்கறிந்தவர்கள்) என்று கூறப்பட்டுவந்த சிலரை -அவர்கள் எழுபது பேர் ஆவர்- இணைவைப்பவர்கள் சிலரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்களது தரப்பிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே (பரஸ்பர பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த இவர்களது கை ஓங்கிவிட்டது. (அந்த 70 பேரையும் கொன்றுவிட்டனர்.) “எனவேதான், அவர்களுக்கெதிராக ஒரு மாத காலம் ருகூவிற்குப் பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “குனூத்' ஓதினார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.170 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا عبد الواحد، حدثنا عاصم الاحول، قال سالت انس بن مالك رضى الله عنه عن القنوت، في الصلاة فقال نعم. فقلت كان قبل الركوع او بعده قال قبله. قلت فان فلانا اخبرني عنك انك قلت بعده، قال كذب انما قنت رسول الله صلى الله عليه وسلم بعد الركوع شهرا، انه كان بعث ناسا يقال لهم القراء، وهم سبعون رجلا الى ناس من المشركين، وبينهم وبين رسول الله صلى الله عليه وسلم عهد قبلهم، فظهر هولاء الذين كان بينهم وبين رسول الله صلى الله عليه وسلم عهد، فقنت رسول الله صلى الله عليه وسلم بعد الركوع شهرا يدعو عليهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4096
- Book Index
- 140
Grades
- -
