ஹதீஸ்கள்
#4057
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையுமே ஒன்று சேர்த்து எனக்காக (அர்ப்பணிப்பதாக)க் கூறினார்கள். அறிவிப்பாளர் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தாம் போர் புரிந்துகொண்டிருந்தபோது, “என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் பற்றியே இவ்வாறு சஅத் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا ليث، عن يحيى، عن ابن المسيب، انه قال قال سعد بن ابي وقاص رضى الله عنه لقد جمع لي رسول الله صلى الله عليه وسلم يوم احد ابويه كليهما. يريد حين قال " فداك ابي وامي ". وهو يقاتل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4057
- Book Index
- 103
Grades
- -
