ஹதீஸ்கள்
#4048
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையின் சகோதரர் (அனஸ் பின் அந்நள்ர்-ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார். அன்னார் (திரும்பி வந்தவுடன்), “(இணைவைப்பாளர்களுடன்) நபி (ஸல்) அவர்கள் நடத்திய முதல் போரில் நான் கலந்துகொள்ள முடியவில்லை. நபி (ஸல்) அவர்களுடன் என்னையும் அல்லாஹ் பங்கு பெறவைத்திருந்தால் நான் கடும் முயற்சியெடுத்து (வீரமாகப்) போரிடுவதை அல்லாஹ் நிச்சயம் பார்த்திருப்பான்” என்று சொன்னார். அவர் உஹுத் போரைச் சந்தித்தார். (அதில் கலந்துகொண்டார். அந்தப் போரில்) மக்கள் தோல்வியுற்றனர். அப்போது அவர், “இறைவா! இந்த முஸ்லிம்கள்செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகி றேன். இணைவைப்பாளர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக் கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்” என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) தமது வாளுடன் முன்னேறிச் சென்றார். அப்போது (எதிரில் வந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சந்தித்து, “சஅதே! எங்கே (செல்கிறீர்கள்)? உஹுத் மலைக்கு அருகிலிருந்து நான் சொர்க்கத்தின் சுகந்தத்தை உணர்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார். பிறகு, (உடல் முழுதும் சிதைந்துபோனதால்) அடையாளம் அறியப்படாத நிலைமையில் கொல்லப்பட்டார். அவரை அவருடைய சகோதரி, மச்சத்தை வைத்தோ -அல்லது அவருடைய கை விரல் நுனிகளை வைத்தோ அடையாளம் கண்டுகொண்டார். அவரது உடலில் (வாளால்) வெட்டப்பட்டும், (ஈட்டியால்) குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன.115 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4048
- Book Index
- 94
Grades
- -