ஹதீஸ்கள்
#4026
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறப்போர்கள் குறித்து அறிவிப்புச் செய்ததற்குப் பின்னால்) இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ -ரஹ்) அவர்கள், “இவைதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறப்போர்கள்' என்று கூறினார்கள். அப்போது (பத்ர் போரில் மாண்டுபோன குறைஷித் தலைவர்களின் சடலங்களைக் கிணற்றில்) எறிந்துவிட்டு அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுடைய இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையானதாகக் கண்டுகொண்டீர்களா?” எனக் கேட்டார்கள் என்று (பத்ர் போர் பற்றிய) ஹதீஸையும் கூறினார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர், “இறந்துபோன மக்களை நோக்கியா பேசுகின்றீர்கள்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்களிடம் நான் கூறுவதை, அவர்களைவிட நீங்கள் நன்கு செவியுறுபவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.67 (அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) குறைஷி (முஸ்லிம்)களில், (ஏதேனும் தகுந்த காரணத்தால்) பத்ர் போரில் கலந்து(கொள்ளாதபோதிலும், கலந்துகொண்டதாகத் கருதப்பட்டுப் போர்ச் செல்வத்தில்) பங்கு வழங்கப்பட்டவர்கள் மொத்தம் எண்பத்தியொரு பேராகும். “(போர்ச் செல்வத்தில்) குறைஷியரின் பங்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது; நூறு பேர் இருந்தனர். “அல்லாஹ்வே மிக அறிந்தவன்' என்று ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் சொன்னார்கள்” என உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுவது வழக்கம். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن المنذر، حدثنا محمد بن فليح بن سليمان، عن موسى بن عقبة، عن ابن شهاب، قال هذه مغازي رسول الله صلى الله عليه وسلم. فذكر الحديث، فقال رسول الله صلى الله عليه وسلم وهو يلقيهم " هل وجدتم ما وعدكم ربكم حقا ". قال موسى قال نافع قال عبد الله قال ناس من اصحابه يا رسول الله تنادي ناسا امواتا قال رسول الله صلى الله عليه وسلم " ما انتم باسمع لما قلت منهم ". قال ابو عبد الله فجميع من شهد بدرا من قريش ممن ضرب له بسهمه احد وثمانون رجلا، وكان عروة بن الزبير يقول قال الزبير قسمت سهمانهم فكانوا ماية، والله اعلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4026
- Book Index
- 75
Grades
- -
