ஹதீஸ்கள்
#4025
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்களின் (மீது சொல்லப்பட்ட அவதூறு) நிகழ்ச்சி குறித்து உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), அல்கமா பின் வக்காஸ் (ரஹ்), உபைதுல்லா பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரிடம் செவியுற்றேன். (அவர்களில்) ஒவ்வொரு வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை எனக்கு அறிவித்தனர். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நானும் (அபூருஹ்மின் மகள்) உம்மு மிஸ்(த்)தஹும் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்(த்)தஹ் (மிஸ்(த்)தஹின் தாயார்) தமது கம்பளி அங்கியில் இடறிக்கொண்டார். அப்போது அவர், (அவதூறில் கலந்துகொண்ட தம் மகன் மிஸ்(த்)தஹைச் சபித்தவராக), “மிஸ்(த்)தஹ் நாசமாகட்டும்” என்று கூறினார். நான், “மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ர் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்?” என்று கூறினேன்... பிறகு அவதூறு பற்றிய ஹதீஸை (முழு வடிவத்துடன்) அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.66 அத்தியாயம் :
حدثنا الحجاج بن منهال، حدثنا عبد الله بن عمر النميري، حدثنا يونس بن يزيد، قال سمعت الزهري، قال سمعت عروة بن الزبير، وسعيد بن المسيب، وعلقمة بن وقاص، وعبيد الله بن عبد الله، عن حديث، عايشة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم كل حدثني طايفة من الحديث قالت فاقبلت انا وام مسطح فعثرت ام مسطح في مرطها فقالت تعس مسطح. فقلت بيس ما قلت، تسبين رجلا شهد بدرا فذكر حديث الافك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4025
- Book Index
- 74
Grades
- -
