ஹதீஸ்கள்
#4021
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “என்னுடன் நம் அன்சாரித் தோழர்களிடம் (பனூ சாஇதா சமுதாயக்கூடத்துக்கு) வாருங்கள்” என்று கூறினேன். (நாங்கள் போய்க்கொண்டிருந்தோம்.) அப்போது அன்சாரிகளில் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களான இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தார்கள்.59 அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை) நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் கூறியபோது, “உவைம் பின் சாஇதா (ரலி), மஅன் பின் அதீ (ரலி) ஆகியோரே அந்த இருவர்' என்று அவர்கள் கூறினார்கள்.60 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4021
- Book Index
- 70
Grades
- -