ஹதீஸ்கள்
#4011
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பனூ அதீ குலத்தில் பெரியவரும், நபி (ஸல்) அவர்களுடன் பத்ர் போரில் கலந்துகொண்ட ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்களின் மகனுமான அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) அறிவித் தார்கள்: (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் குதாமா பின் மழ்ஊன் (ரலி) அவர்களை பஹ்ரைன் (நாட்டின்) ஆளுநராக நியமித்தார்கள். அவர் பத்ர் போரில் கலந்துகொண்டவராவார். மேலும் அவர் (உமர் (ரலி) அவர்களின் மகன்) அப்துல்லாஹ் பின் உமருக்கும், (உமர் (ரலி) அவர்களின் மகள்) ஹஃப்ஸாவுக் கும் தாய்மாமன் ஆவார். அல்லாஹ் இவர்கள் அனைவரைக் குறித்தும் அன்பு கொள்வானாக! 4012, 4013 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என்று பத்ர் போரில் கலந்துகொண்டவர்களான என் தந்தையின் இரு சகோதரர்கள் (ளுஹைர், முளஹ்ஹர்) கூறினர்.52 இதை சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சாலிம் அவர்களிடம், “நீங்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்' என்று கூறிவிட்டு, “ராஃபிஉ தம்மீது சிரமத்தை ஏற்படுத்திக்கொண்டார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني عبد الله بن عامر بن ربيعة، وكان، من اكبر بني عدي وكان ابوه شهد بدرا مع النبي صلى الله عليه وسلم ان عمر استعمل قدامة بن مظعون على البحرين، وكان شهد بدرا، وهو خال عبد الله بن عمر وحفصة رضى الله عنهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4011
- Book Index
- 62
Grades
- -
