ஹதீஸ்கள்
#4008
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி இரு (2:285, 286), வசனங்களை, யார் இரவு நேரத்தில் ஓதுகிறாரோ அந்த இரண்டும் அவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக ஆகிவிடும். இதை பத்ர் போரில் கலந்துகொண்டவரான அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூமஸ்ஊத் அல்பத்ரீ (ரலி) அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தபோது அவர்களை நான் சந்தித்து இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அப்போது (அல்கமா (ரஹ்) அவர்களிடம் கூறியதைப் போன்றே) என்னிடமும் அதைக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا موسى، حدثنا ابو عوانة، عن الاعمش، عن ابراهيم، عن عبد الرحمن بن يزيد، عن علقمة، عن ابي مسعود البدري رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " الايتان من اخر سورة البقرة من قراهما في ليلة كفتاه ". قال عبد الرحمن فلقيت ابا مسعود وهو يطوف بالبيت، فسالته فحدثنيه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4008
- Book Index
- 59
Grades
- -
