ஹதீஸ்கள்
#4007
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: கூஃபாவின் ஆளுநர் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் (ஒருநாள்) அஸ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தி விட்டார்கள். அப்போது ஸைத் பின் ஹசன் (ரஹ்) அவர்களின் பாட்டனாரும் பத்ர் போரில் கலந்துகொண்டவருமான அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் வந்து, “(முஃகீரா அவர்களே!) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (ஐவேளை தொழுகைகளையும் அவற்றுக்குரிய நேரங்களில்) தொழுதார் கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஐந்து (நேரத்) தொழு கைகளை (அவ்வாறே) தொழுதார்கள். பிறகு, ஜிப்ரீல் (அலை) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), “இவ்வா(று குறித்த நேரங்களில் தொழுதுகாட்டுமா)றே நான் பணிக்கப்பட்டுள்ளேன் என்று (கூறியதெல் லாம்) உங்களுக்குத் தெரியுமே!” என்று கேட்டார்கள். உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களது ஆட்சிக் காலத்தில் (ஒரு நாள், அன்னார் தொழுகையைத் தாமதப்படுத்தியபோது) அவர்களிடம் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸைத் தெரிவித்தார்கள்.49 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4007
- Book Index
- 58
Grades
- -