ஹதீஸ்கள்
#4000
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அபூஹுதைஃபா (ரலி) அவர்கள் சாலிமைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டார்கள். அவருக்குத் தம் சகோதரரின் மகளான ஹின்த் பின்த் வலீத் பின் உத்பாவைத் திருமணமும் செய்துவைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைதை வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டது போல (சாóமை, அபூஹுதைஃபா (ரலி) அவர்கள் வளர்ப்பு மகனாக்கிக்கொண்டார்கள்.) மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைப்பதும் அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) ஆக்கும் பழக்கமும் இருந்துவந்தன. “வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள்” எனும் (33:5) வசனத்தை அல்லாஹ் அருளும்வரையில் (இந்தப் பழக்கம் நீடித்தது.)42 “பிறகு (அபூஹுதைஃபாவின் துணைவியார்) சஹ்லா (பின்த் சுஹைல் -ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்...” என்று (தொடங்கும்) ஹதீஸை (அறிவிப்பாளர் அபுல்யமான் (ரஹ்) அவர்கள்) முழுமையாகக் கூறினார்கள்.43 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، اخبرني عروة بن الزبير، عن عايشة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم ان ابا حذيفة وكان ممن شهد بدرا مع رسول الله صلى الله عليه وسلم تبنى سالما، وانكحه بنت اخيه هند بنت الوليد بن عتبة وهو مولى لامراة من الانصار كما تبنى رسول الله صلى الله عليه وسلم زيدا، وكان من تبنى رجلا في الجاهلية دعاه الناس اليه، وورث من ميراثه حتى انزل الله تعالى {ادعوهم لابايهم} فجاءت سهلة النبي صلى الله عليه وسلم، فذكر الحديث
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4000
- Book Index
- 51
Grades
- -
