ஹதீஸ்கள்
#3997
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அப்துல்லாஹ் பின் கப்பாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூசயீத் பின் மாலிக் அல்குத்ரீ (ரலி) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பிய போது, அவர்களுடைய துணைவியார் குர்பானி இறைச்சியை (சாப்பிடுவதற்காக)க்கொண்டுவந்து அவர்களுக்கு முன்னால் வைத்தார். அப்போது அவர்கள், “இது பற்றி நான் (மார்க்கத் தீர்ப்புக்) கேட்காத வரையில் இதை உண்ணமாட்டேன்' என்று கூறினார்கள். உடனே அவர்கள் தம் தாய்வழிச் சகோதரரான கத்தாதா பின் நுஅமான் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். -அவர் பத்ர் போரில் கலந்துகொண்டவராயிருந்தார்38 -(அவரிடம் சென்று) இது பற்றிக் கேட்டார்கள். அதற்கு கத்தாதா (ரலி) அவர்கள், “குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்குமேல் (சேமித்து வைத்து) எவரும் சாப்பிடக் கூடாது என்ற சட்டத்தை மாற்றும் உத்தரவு நீங்கள் (பயணம்) சென்றதற்குப் பின்னால் வெளியானது' என்று கூறினார்கள்.39 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #3997
- Book Index
- 48
Grades
- -