ஹதீஸ்கள்
#3988
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பத்ர் போரின்போது (படை) அணியில் நின்றுகொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் இளவயதுடைய இரு இளைஞர்கள் (நின்றுகொண்டு) இருந்தனர். அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன்.30 அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடத்தில், “என் பெரிய தந்தையே! அபூஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார். அப்போது நான், “என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவனை நான் கண்டால் (ஒன்று,) அவனை நான் கொல்வேன்; அல்லது அதற்காக(ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக்கொண்டுள்ளேன்”என்றார். அப்போது மற்றொருவரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலாமவரைப் போலவே என்னிடம் கூறினார். அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. ஆதலால், அவ்விருவருக்கும் அபூஜஹ்லை சுட்டிக் காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் “அஃப்ரா'வின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித்) ஆவர்.31 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #3988
- Book Index
- 39
Grades
- -