ஹதீஸ்கள்
#3986
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள், (மலைக்கணவாயில் நிறுத்தப்பட்ட) அம்பெய்யும் வீரர்களுக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களை(த் தலைவராக) நியமித்தார்கள். (அந்தப் போரின்போது முஸ்óம் களாகிய) எங்களில் எழுபது பேரை (இணைவைப்பவர்களான) அவர்கள் கொன்றனர். (அதற்குமுன் நடந்த) பத்ர் போரின்போது நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும் இணை வைப்பாளர்களில் எழுபது பேரைக் கைது செய்து இன்னும் எழுபது பேரைக் கொன்று, (ஆக மொத்தம்) நூற்று நாற்பது பேரை வீழ்த்தினார்கள். (இதைப் பற்றி) அபூசுஃப்யான் கூறினார்: இந்த (உஹுத் போரின்) நாள் பத்ருடைய நாளுக்குப் பதிலாகும். போர் என்பதே (கிணற்று) வாளிகள்தான். (மாறி, மாறிதான் இறைக்க முடியும்)28 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #3986
- Book Index
- 37
Grades
- -