ஹதீஸ்கள்
#3982
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இளைஞராயிருந்த ஹாரிஸா பின் சுராகா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் பத்ர் போரில் கொல்லப்பட்டார்கள். ஆகவே, அவர்களின் தாயார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஹாரிஸாவுக்கு உள்ள தகுதியைத் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். (இப்போது) ஹாரிஸா சொர்க்கத்தில் இருந்தால் நான் நன்மையை நாடி பொறுமைகாப்பேன். (இதுவன்றி) வேறு நிலையாக இருப்பின், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அடப்பாவமே! இழந்து தவிக்கிறாயோ!” (என்று கூறிவிட்டு) “சொர்க்கம் ஒன்றே ஒன்றுதான் உள்ளதா? சொர்க்கம் பல உண்டு. (உன் மகன்) ஹாரிஸா (உயர்ந்த சொர்க்கமான) “ஜன்னத்துல் பிர்தவ்ஸ்' எனும் சொர்க்கத்தில் இருக்கிறார்” என்று கூறினார்கள்.24 அத்தியாயம் :
حدثني عبد الله بن محمد، حدثنا معاوية بن عمرو، حدثنا ابو اسحاق، عن حميد، قال سمعت انسا رضى الله عنه يقول اصيب حارثة يوم بدر وهو غلام، فجاءت امه الى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله، قد عرفت منزلة حارثة مني، فان يكن في الجنة اصبر واحتسب، وان تك الاخرى ترى ما اصنع فقال " ويحك اوهبلت اوجنة واحدة هي انها جنان كثيرة، وانه في جنة الفردوس
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #3982
- Book Index
- 33
Grades
- -
