ஹதீஸ்கள்
#3981
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ரின் கிணற்றருகில் நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு (உள்ளே கிடந்த இறைமறுப்பாளர்களின் சடலங்களை நோக்கி), “உங்களுக்கு உங்களுடைய இறைவன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானதுதான் என்று கண்டுகொண்டீர்களா?” என்று கேட்டார்கள். பிறகு, “இவர்கள், நான் கூறுவதை இப்போது செவியுறுகிறார்கள்” என்றும் கூறினார்கள். (“இறந்தவர்கள் செவியுறுகிறார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்ற) தகவல் ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, “நான் அவர்களுக்குச் சொல்லிவந்த (கொள்கைகள்) எல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்' என்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள். பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக), “(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது” எனும் (35:22) இறைவசனத்தை (இறுதிவரை) ஓதினார் கள்.23 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #3981
- Book Index
- 32
Grades
- -