ஹதீஸ்கள்
#3937
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) மதீனா வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கும் சஅத் பின் அர்ரபீஉ அல் அன்சாரி (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள், தம் குடும்பத்தாரையும் தமது செல்வத்தையும் அவருக்குச் சரிபாதியாகப் பங்கிட்டுத் தருவதாகக் கூறினார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டாரிலும் செல்வத்திலும் அருள்வளத்தை வழங்குவானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். (அவ்வாறே அவர் கடைவீதியைக் காட்ட அங்கு வியாபாரம் செய்து) சிறிது பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்றார்கள். சில நாட்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள்மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு (வியந்து), “என்ன இது, அப்துர் ரஹ்மான்!” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் அன்சாரி பெண்ணொரு வரை மணம் புரிந்துகொண்டேன்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவளுக்கு (மணக்கொடையாக) என்ன கொடுத்தீர்?” என்று கேட்க, “ஒரு பேரீச்சங் கொட்டை யளவு தங்கம்” என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் பதிலளித் தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், “ஓர் ஆட்டை அறுத்தாவது மணவிருந்து (வலீமா) கொடுப்பீராக!” என்று சொன் னார்கள்.188 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3937
- Book Index
- 162
Grades
- -