ஹதீஸ்கள்
#3932
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தபோது மதீனாவின் மேற்பகுதியில் “பனூ அம்ர் பின் அவ்ஃப்' என்றழைக்கப்பட்டுவந்த ஒரு குடும்பத்தாரிடம் இறங்கி, அவர்களி டையே பதினான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு பனுந் நஜ்ஜார் கூட்டத்தாருக்கு ஆளனுப்பினார்கள். பனுந் நஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாக) தம் வாட்களைத் தொங்கவிட்டபடி வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வாகனத்தில் அமர்ந்திருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள், அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்க, பனுந் நஜ்ஜார் கூட்டத்தார் அவர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த (அந்தக் காட்சி)தனை (இப்போதும்) நான் காண்பதைப் போன் றுள்ளது. இறுதியாக, நபி (ஸல்) அவர்கள் (தம் வாகனத்தை) அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் நிறுத்தினார்கள். -தொழுகை நேரம் (தம்மை) வந்தடையும் இடத்திலேயே நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள். ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள்- பிறகு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி உத்தரவிட்டார்கள். பனுந் நஜ்ஜார் கூட்டத்தாருக்கு நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்ப, அவர்கள் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “பனுந் நஜ்ஜார் கூட்டத்தாரே! (பள்ளிவாசல் கட்டுவதற்காக) உங்களது இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை. அல்லாஹ் வின் மீதாணையாக! அதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்” என்று பதிலளித்தார்கள். நான் உங்களிடம் சொல்பவைதான் அந்தத் தோட்டத்தில் இருந்தன: அதில் இணைவைப்பவர்களின் அடக்கத் தலங்கள் இருந்தன. அதில் இடிபாடுகளும், சில பேரீச்சமரங்களும் இருந்தன. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இணைவைப்போரின் அடக்கத் தலங்களைத் தோண்டும்படி உத்தரவிட அவ்வாறே அவை தோண்டப்பட்டன. இடிபாடுகளை (அகற்றிச்) சமப்படுத்தும்படி உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன. பேரீச்ச மரங்களை வெட்டும்படி உத்தரவிட அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லா திசையில் பேரீச்சமரங்களை வரிசையாக நட்டனர். பள்ளிவாசலின் (கதவின்) இரு நிலைக் கால்களாக கல்லை (நட்டு) வைத்தனர். “ரஜ்ஸ்' எனும் ஈரசைச் சீரில் அமைந்த பாடலைப் பாடிக்கொண்டே அந்தக் கல்லை எடுத்துவரலாயினர். அப்போது அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இருந்தார்கள். “இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே, (மறுமை வெற்றிக்காகப் பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் உதவி செய்!” என்று அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள்.180 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا عبد الوارث،. وحدثنا اسحاق بن منصور، اخبرنا عبد الصمد، قال سمعت ابي يحدث، حدثنا ابو التياح، يزيد بن حميد الضبعي قال حدثني انس بن مالك رضى الله عنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة، نزل في علو المدينة في حى يقال لهم بنو عمرو بن عوف قال فاقام فيهم اربع عشرة ليلة، ثم ارسل الى ملا بني النجار قال فجاءوا متقلدي سيوفهم، قال وكاني انظر الى رسول الله صلى الله عليه وسلم على راحلته، وابو بكر ردفه، وملا بني النجار حوله حتى القى بفناء ابي ايوب، قال فكان يصلي حيث ادركته الصلاة، ويصلي في مرابض الغنم، قال ثم انه امر ببناء المسجد، فارسل الى ملا بني النجار، فجاءوا فقال " يا بني النجار، ثامنوني حايطكم هذا ". فقالوا لا، والله لا نطلب ثمنه الا الى الله. قال فكان فيه ما اقول لكم كانت فيه قبور المشركين، وكانت فيه خرب، وكان فيه نخل، فامر رسول الله صلى الله عليه وسلم بقبور المشركين فنبشت، وبالخرب فسويت، وبالنخل فقطع، قال فصفوا النخل قبلة المسجد قال وجعلوا عضادتيه حجارة. قال قال جعلوا ينقلون ذاك الصخر وهم يرتجزون، ورسول الله صلى الله عليه وسلم معهم يقولون اللهم انه لا خير الا خير الاخره فانصر الانصار والمهاجره
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3932
- Book Index
- 157
Grades
- -
