ஹதீஸ்கள்
#3931
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஈதுல் பித்ர்' அல்லது “ஈதுல் அள்ஹா' (பெரு)நாளில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் அமர்ந்திருந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது “புஆஸ்' போர் நாளில் அன்சாரிகள் பாடிய பாடல்களை (சலங்கை யில்லா கஞ்சிராவை அடித்துக்கொண்டு) பாடியபடி இரு பாடகியர் என்னருகே இருந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஷைத்தா னின் (இசைக்) கருவி” என்று இருமுறை கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்விருவரையும் விட்டுவிடுங்கள், அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை (நாள்) ஒன்று உண்டு. நமது பண்டிகை (நாள்) இந்த நாள்தான்” என்று சொன்னார்கள்.179 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3931
- Book Index
- 156
Grades
- -