ஹதீஸ்கள்
#3928
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜின்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் “மினா' பெரு வெளியில் தங்கியிருந்த சமயம் தமது (தங்குமிடத்தில் இருந்த) வீட்டாரை நோக்கித் திரும்பினார்கள். அப்போது அவர்கள் என்னைக் கண்டு, “(நான் உமர் (ரலி) அவர்களிடம்)175 இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! ஹஜ்ஜுப் பருவத்தில் (நன்மக்களுடன்) தரம் தாழ்ந்த மக்களும், (வாய்க்கு வந்தபடி பேசி) குழப்பம் செய்யும் மக்களும் ஒன்று கூடுவர். (எனவே,) தாங்கள் மதீனா சென்றடையும்வரையிலும், (அங்குள்ள) மார்க்க அறிஞர்கள், பிரமுகர்கள், ஆலோசகர்களைப் போய்ச்சேரும் வரையிலும் தாங்கள் நிதானிக்க வேண்டு மென்று நான் கருதுகிறேன். ஏனெனில் மதீனா, ஹிஜ்ரத் பிரதேசமும், நபிவழி (நடைமுறைப்படுத்தப்படும்) நாடும், பாதுகாப்புமிக்க நாடும் ஆகும்” என்று கூறினேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இனி, நான் மதீனாவில் (உரை நிகழ்த்த) நிற்கப்போகும் முதல் கூட்டத்திலேயே (இது குறித்து எச்சரிக்க) உறுதியோடு நிற்பேன்” என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.176 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3928
- Book Index
- 153
Grades
- -