ஹதீஸ்கள்
#3927
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஏகத்துவ உறுதி மொழி கூறி (இறைவனைப் புகழ்ந்து)விட்டு, “இறைவாழ்த்துக்குப்பின்! அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். நான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்பை ஏற்று முஹம்மத் (ஸல்) அவர்கள் எ(ந்த வேத)த்துடன் அனுப்பப் பட்டார்களோ அதை நான் நம்பி ஏற்றுக் கொண்டேன். பிறகு, (மக்காவைத் துறந்து அபிசீனியாவுக்கும் அடுத்து மதீனாவுக்கு மாக) இரண்டு ஹிஜ்ரத்கள் செய்தேன். மேலும், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மருமகனாக இருந்தேன். அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து (உறுதிமொழி) கொடுத்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும்வரை அவர்களுக்கு நான் மாறு செய்யவுமில்லை; மோசடி செய்யவுமில்லை” என்று சொன் னார்கள். “ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் எனக்கு இதையே அறிவித்தார்கள்” என்று இஸ்ஹாக் அல்கல்பீ (ரஹ்) என்னும் அறிவிப்பாளர் கூறுகிறார்கள்.174 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3927
- Book Index
- 152
Grades
- -