ஹதீஸ்கள்
#3926
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் பிலால் (ரலி) அவர்களுக் கும் காய்ச்சல் கண்டிருந்தது. அவ்விருவரிட மும் நான் சென்று, “என் தந்தையே! எப்படியிருக்கிறீர்கள்? பிலால் அவர்களே! எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அபூபக்ர் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர்கள் பின்வரும் கவிதையைக் கூறுவார்கள்: காலைவாழ்த்துக் கூறப்பெற்றநிலையில்ஒவ்வொரு மனிதனும்தன் குடும்பத்தாரோடுகாலைப் பொழுதை அடைகிறான்... (ஆனால்,)மரணம்-அவன் செருப்பு வாரைவிடமிக அருகில் இருக்கிறது(என்பது-அவனுக்குத் தெரிவதில்லை). பிலால் (ரலி) அவர்கள் காய்ச்சல் நீங்கியதும், வேதனைக் குரல் எழுப்பி, “இத்கிர்' (நறுமணப்) புல்லும்”ஜலீல்' (கூரைப்) புல்லும்என்னைச் சூழ்ந்திருக்க..........(மக்காவின்) பள்ளத்தாக்கில்ஓர் இராப் பொழுதையேனும்நான் கழிப்பேனா......... ? “மஜன்னா' எனும்(மக்காவின் இனிப்புச்சுனை) நீரைஒருநாள் ஒரு பொழுதாவதுநான் பருகுவேனா......... ? ரு (மக்கா நகரின்)ஷாமா, தஃபீல் மலைகள்(இனி எப்போதாவது)எனக்குத் தென்படுமா......... ? என்ற கவிதையைக் கூறுவார்கள். உடனே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, (அவர்களின் நிலையைத்) தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நாங்கள் மக்காவை நேசித்ததுபோல் அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு வாயாக! மேலும் இவ்வூரை ஆரோக்கியமானதாகவும் ஆக்குவாயாக! எங்களுடைய (அளவைகளான) “ஸாஉ', “முத்' முதலியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ அருள்வளத்தை வழங்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை இடம்பெயரச் செய்து அதை “ஜுஹ்ஃபா' எனுமிடத்தில் (குடி)அமர்த்திவிடுவாயாக!” என்று துஆ செய்தார்கள்.173 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3926
- Book Index
- 151
Grades
- -