ஹதீஸ்கள்
#3925
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் (மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து) முதன்முதலில் வந்தவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் இப்னு உம்மி மக்(த்)தூம் (ரலி) அவர்களும்தான். இவர்கள் மக்களுக்கு (குர்ஆன்) ஓதக் கற்றுக் கொடுத்துவந்தனர். பிறகு பிலால் (ரலி) அவர்களும், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும், அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களும் வந்தனர். பிறகு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் நபித்தோழர்கள் இருபது பேர் (கொண்ட ஒரு குழு) உடன் வந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள(து வருகைய)ôல் மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற் காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் பார்க்கவில்லை. எந்த அளவுக் கென்றால் (மதீனாவின்) அடிமைப் பெண்கள், “அல்லாஹ்வின் தூதர் வந்து விட்டார்கள்” என்று பாடி (மகிழலா)னார்கள். “சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா' எனும் (87ஆவது) அத்தியாயத்தை, குர்ஆனின் (மற்ற) சிறுசிறு (முஃபஸ்ஸல்) அத்தியாயங் கள் சிலவற்றுடன் நான் (மனப்பாடமாக) ஓதும்வரை நபி (ஸல்) அவர்கள் (மதீனா) வரவில்லை. அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن ابي اسحاق، قال سمعت البراء بن عازب رضى الله عنهما قال اول من قدم علينا مصعب بن عمير وابن ام مكتوم، وكانا يقريان الناس، فقدم بلال وسعد وعمار بن ياسر، ثم قدم عمر بن الخطاب في عشرين من اصحاب النبي صلى الله عليه وسلم ثم قدم النبي صلى الله عليه وسلم، فما رايت اهل المدينة فرحوا بشىء فرحهم برسول الله صلى الله عليه وسلم، حتى جعل الاماء يقلن قدم رسول الله صلى الله عليه وسلم فما قدم حتى قرات {سبح اسم ربك الاعلى} في سور من المفصل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3925
- Book Index
- 150
Grades
- -
