ஹதீஸ்கள்
#3923
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஹிஜ்ரத் குறித்துக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உமக்கு என்ன கேடு? -(எனச் செல்லமாகக் கேட்டுவிட்டு)- நிச்சயமாக அதன் நிலை மிகவும் கடின மானது. உம்மிடம் ஒட்டகங்கள் இருக்கின் றனவா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்' என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவற்றுக்குரிய ஸகாத் கொடுத்து வருகி றாயா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்' என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவற்றிலிருந்து (இலவசமாகப் பால் கறந்துகொள்ள, ஏழைகளுக்கு) இரவல் கொடுக்கிறீரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்' என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவை (நீர்நிலைகளுக்கு) நீரருந்தச் செல்லும் (முறை வரும்) நாளில் அவற்றின் பாலைக் கறந்து (ஏழைகளுக்குக்) கொடுக்கிறீரா?” என்று கேட்க அவர், “ஆம்' என்றார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், நீர் ஊர்களுக்கு அப்பால் சென்றுகூட நன்மை செய்யலாம். அல்லாஹ் உம்முடைய நற்செயல்(களின் பிரதிபலன்)களில் எதையும் குறைக்கமாட்டான்” என்று சொன்னார்கள்.170 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3923
- Book Index
- 148
Grades
- -