ஹதீஸ்கள்
#3922
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹிஜ்ரத் பயணத்தின்போது வழியில்) நபி (ஸல்) அவர்களுடன் நான் (“ஸவ்ர்' மலைக்) குகையில் (தங்கி) இருந்தேன். நான் தலையை உயர்த்தியபோது (எங்களைத் தேடிவந்த) கூட்டத்தாரின் பாதங்கள் என் (தலைக்கு)மேலே தெரிந்தன. நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் எவராவது தம் பார்வையைத் தாழ்த்தி (குகைக்குள் உற்றுநோக்கி)னால் நம்மைப் பார்த்துவிடுவாரே! (இப்போது என்ன செய்வது?)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அமைதியாயிருங் கள்; அபூபக்ரே! (நாம்) இருவர்; நம்முடன் அல்லாஹ் மூன்றாமவன். (அவன் நம்மைக் காப்பாற்றுவான்)” என்று சொன்னார்கள்.169 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3922
- Book Index
- 147
Grades
- -