ஹதீஸ்கள்
#3921
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் “பனூ கல்ப்' குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். “உம்மு பக்ர்' என்பது அந்தப் பெண்ணின் பெயராகும். அபூபக்ர் (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்தபோது அப்பெண்ணை மணவிலக்கு செய்துவிடவே, அவரை அவருடைய தந்தையின் சகோதரர் மகன் (மறு)மணம் புரிந்துகொண்டார். அவர்தான் (பத்ர் போரில் கொல்லப்பட்டு, பத்ர் பாழுங்கிணற்றில் போடப்பட்ட) குறைஷி குல இறைமறுப்பாளர் களுக்காக இந்த இரங்கற்பாவைப் பாடிய கவிஞர் ஆவார்: பத்ரின் பாழுங்கிணற்றுக்கு(இப்போது)என்ன களங்கம் நேர்ந்துவிட்டது?ஒட்டகத் திமில்களால்அலங்கரிக்கப்பட்ட மரத்தட்டுகளால்(விருந்தளிக்கும் அதிபர்கள்167தூக்கி வீசப்பட்டதால்..........)பத்ரின் பாழுங்கிணற்றுக்குஎன்ன (களங்கமா)நேர்ந்துவிட்டது? அழகிய பாடகிகளால் ..........மதிப்புக்குரியமதுபோதைப் பிரியர்களால் .........(என் காதலி)உம்மு பக்ர் எங்கள்மனச்சாந்திக்காகஆறுதல் சொல்கிறாள். என் சமுதாயமே(சமாதிக்குப்) போனபின்எனக்கேது மனச்சாந்தி ..........? (மரணத்திற்குப்பின்)நாம் மீண்டும்உயிர்த்தெழுவோம்என்கிறார் இறைத்தூதர்!(ஆனால்,)ஆந்தைகளும் தேவாங்குகளும்உயிர் பிழைப்பது எப்படி.......... ?168 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3921
- Book Index
- 146
Grades
- -